தற்காலிக டிரைவர்களுக்குத் தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பயிற்சி பெறாத தற்காலிக டிரைவர்களை வைத்து அரசு பஸ்களை ஓட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் கோரி மாநில அரசுக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாஷ் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பஸ்களை ஓட்டுவதற்காகஏராளமான பயிற்சி பெறாத, தற்காலிக டிரைவர்களை அரசு நியமித்துள்ளது.

இவர்களை வைத்து அரசு பஸ்களை இயக்கி வருகிறது. இதுதவிர ஏராளமான தனியார் பஸ்களும் சென்னை நகரில் இயக்கப்பட்டுவருகின்றன. இதனால் நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தற்காலிக, பயிற்சி பெறாத டிரைவர்களைக் கொண்டுபஸ்களை இயக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோயிருந்தார்.

மனுவை நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, சிவசுப்ரமணியன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு இது குறித்துஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+