பைக்கில் சென்ற குடும்பத்தைக் கொன்ற தாற்காலிக டிரைவர்
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே தாற்காலிக டிரைவர் ஓட்டி வந்த அரசு பஸ் மோதியதில் பைக்கில் பயணம் செய்த அப்பா,அம்மா, மகன் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
ஈரோட்டிலிருந்து சென்னைக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக,தாற்காலிகமாக நியமிக்கப்பட்ட டிரைவர் இந்த பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்தார்.
செங்கல்பட்டு அருகே இந்த பஸ் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த அப்பா, அம்மா, மகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாற்காலிக பஸ் டிரைவர்களால் இதுவரை 60க்கும் மேற்பட்ட விபத்துக்கள் தமிழகத்தில் நடந்துள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
இவர்களால் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications