இன்று கூடுகிறது நாடாளுமன்றம்
டெல்லி:
இன்று (திங்கள்கிழமை) துவங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், பொடோ சட்டம், மகளிர்இட ஒதுக்கீடு சட்டம் உள்பட 20 மசோதாக்கள் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
ஐந்து வாரங்களுக்கு நீடிக்கும் இந்தக் கூட்டத் தொடரில், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளபொடோ சட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு சம்பந்தமான மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இவை தவிர மேலும் 20மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
தெஹல்கா ஊழலில் சிக்கி ராஜினாமா செய்து, மீண்டும் பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஏற்றுள்ள ஜார்ஜ்பெர்னாண்டசுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட உள்ளன.
சமீபத்தில் தடையை மீறி அயோத்தி ராமர் கோவிலுக்குள் நுழைந்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களால் ஏற்பட்டபிரச்சனைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவர்.
இதனால் குளிர்காலக் கூட்டத் தொடர் சூடாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications