கோவையில் ரேஷன் கடை ஊழியர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் இன்று (திங்கள்கிழமை) ரேஷன் கடை ஊழியர்கள் 20 சதவீத போனஸ் கேட்டு உண்ணாவிரதம்இருந்தனர்.
அரசு தற்போது அறிவித்துள்ள 8.33 சதவீதத்திற்குப் பதிலாக சென்ற ஆண்டு வழங்கியதைப் போலவே 20 சதவீதபோனசை வழங்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழக ஊழியர்களைப் போலவே ரேஷன் கடை ஊழியர்களும்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கோயம்புத்தூரில் ரேஷன் கடை ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைமேற்கொண்டனர்.
நாளையும் உண்ணாவிரதம் தொடரும் என்று அவர்கள் கூறினர்.
தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கையாக சிறை நிரப்பும் போராட்டத்தில்ஈடுபடப் போவதாகவும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications