நக்கீரன் நிருபரை விடுவிக்க கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்நாடக அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை உடனடியாகவிடுவிக்க வேண்டும் என கர்நாடக பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தன வீரப்பனை முதன்முதலில் காட்டுக்குள் போய் சந்தித்தவர் சிவசுப்பிரமணியம் தான். இவர் கடந்த இருதினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

அவரை உடனே விடுவிக்க வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் கோரி வருகின்றனர். பத்திரிக்கைசுதந்திரத்துக்காக போராடி வரும் பத்திரிக்கையாளர் செயல் கமிட்டி என்ற அமைப்பின் சார்பில் கர்நாடக உள்துறைஅமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் இது தொடர்பாக மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு தமிழகஅரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மனுவில்,

நிருபர் சிவசுப்பிரமணியத்தை கர்நாடக போலீசார் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் நகரில் அவரது வீட்டில்வைத்து கைது செய்துள்ளனர்.

சிவசுப்பிரமணியத்தை போலீசார் போல இருந்த சிலர் அவரது வீட்டுக்கு அருகே வைத்து இழுத்துச் சென்றதாகநக்கீரன் பத்திரிக்யிைன் ஆசிரியர் ஆர்.கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல்செய்துள்ளார்.

பத்திரிக்கைகளின் சுதந்திரத்தைக் காக்கும் வகையில் இவ் விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டுசிவசுப்பிரமணியத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை இருந்த அனைத்து கர்நாடக மாநிலஅரசுகளும் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளன.

எனவே, சிவசுப்பிரமணியம் விஷயத்தில் உண்மையை வெளியுலகுக்குச் சொல்ல வேண்டும். முதலில் அவரைவிடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பெங்களூரில் நக்கீரன் கோபால்:

இந் நிலையில் நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் இன்று பெங்களூர் வந்தார். அவர் கர்நாடக அரசுஅதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.

சிவசுப்பிரமணியத்தை விடுவிக்க கர்நாடக நீதிமன்றத்தின் உதவியையும் அவர் நாடலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+