பணிக்குத் திரும்பிய பஸ் ஊழியர்கள்
சென்னை:
வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதையடுத்து, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று(திங்கள்கிழமை) காலை முதல் மீண்டும் வேலைக்கு வர ஆரம்பித்தனர்.
கடந்த 17 நாட்களாக வேலை நிறுத்தம், மறியல் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், பொது வேலை நிறுத்தம்என்று பல்வேறு வழிகளிலும் போராடினார்கள் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்.
ஆனாலும் தாங்கள் கேட்ட 20 சதவீத போனசைத் தர அரசு சம்மதிக்காத நிலையிலேயே அவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டுள்ளனர்.
பொதுமக்களின் நன்மை, அரசின் நிதி நிலைமை, நீதிமன்றத்தின் நோட்டீஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,மீண்டும் பணிக்குத் திரும்புவதாக போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் தெரிவித்தன.
அதன்படி இன்று காலை முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர். இன்றுஅதிகாலையிலேயே சென்னையில் அரசு பஸ்கள் முழு அளவில் ஓடத் துவங்கின.