அமெரிக்க குண்டு வீச்சில் 20 எதிர்ப் படையினர் பலி

Subscribe to Oneindia Tamil

குண்டூஸ்:

நார்த்தர்ன் அலையன்ஸ் படை வீரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க விமானங்கள் வீசிய குண்டுகள் அவர்களையேபதம் பார்த்துள்ளன. இந்தக் குண்டு வீச்சில் 20 நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் பலியானதாகக் கூறப்படுகிறது.

குண்டூஸ் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அமெரிக்க விமானங்கள் பயங்கரமான குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தின.

அப்போது குண்டூஸ் நகரை நோக்கி நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் சென்று கொண்டிருந்த டாங்குகள் மீதும்குண்டுகள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் அந்த டாங்குகளில் சென்று கொண்டிருந்த 20 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள்காணாமல் போய்விட்டதாக வேறு சில தகவல்கள் தெரிவித்தன.

இவர்களைத் தவிர மேலும் ஆறு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

காண்டஹாரில் "க்ரவுண்ட் ஜீரோ" கொடி

செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலில் இறந்தவர்களுடைய குடும்பத்தினர் மற்றும்நண்பர்கள் கையெழுத்திட்ட அமெரிக்கக் கொடி ஒன்று விரைவில காண்டஹார் நகரில் பறக்கவிடப் படும்.

நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் இறந்த 4,300 பேர்களில் அமெரிக்க மெரைன் படையினரும் அடங்குவர்.தற்போது காண்டஹாரையும் அமெரிக்க மெரைன் படையினர்தான் பிடித்துள்ளனர்.

எனவே இந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் காண்டஹாரில் உள்ள அமெரிக்க மெரைன் படையினர்முகாமில் இந்தக் கொடி பறக்கவிடப்படும்.

உலக வர்த்தக மையக் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ள இடத்திற்குத்தான் "கிரவுண்ட் ஜீரோ" என்றுபெயரிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+