காவிரி ஆற்றில் மிதந்து வந்த 100, 50 ரூபாய் நோட்டுக்கள்
கரூர்:
கரூர் அருகே காவிரி ஆற்றில் மிதந்து வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
கரூம் மாவட்டம் குளித்தலை, லால்பேட்டை மற்றும் மாயனூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் மிதந்து வந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள்மிதந்து வந்த ரூபாய் நோட்டுக்களை ஆவலோடு எடுத்துச் சென்றனர்.
இவர்களில் பெரும்பாலும் மீன் பிடிக்கச் சென்றவர்கள், சலவைத் தொழிலாளிகள் மற்றும் குளிக்கச் சென்றவர்கள்ஆவர். இவர்கள் கைகளில்தான் அதிக நோட்டுக்கள் சிக்கியுள்ளன.
மிதந்து வந்த நோட்டுக்கள் அனைத்தும் புதியதாகவும், சில நோட்டுக்கள் நீரில் ஊறியதால் கிழிந்தும் இருந்ததாகநேரில் பார்த்தவர்கள் கூறினர்.
மிதந்து வந்த நோட்டுக்கள் அனைத்தையும் சேர்த்தால் ரூ.1 லட்சம் வரை வரும் என்று கூறப்படுகிறது.
கரூர் பகுதியில் உள்ள தொழிலதிபரோ, அரசியல்வாதியோ கருப்புப் பணமாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைஇவ்வாறு ஆற்றில் போட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்துத் தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் இறங்கினர்.