மழைக்கு குடும்பத்தை இழந்தவருக்கு ரூ.50,000 நிவாரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரையில் சமீபத்தில் பெய்த மழைக்கு மனைவி, மகள் உள்ளிட்ட 3 பேரை இழந்தவருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் ரூ.50,000 நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் கக்கப்பன். சமீபத்தில் பெய்த கன மழைக்கு இவரது வீடு இடிந்து விழுந்தது. இதில்கக்கப்பனின் மனைவி, தாயார் மற்றும் மகள் ஆகியோர் பலியாயினர்.
குடும்பத்தையே இழந்து சோகத்தில் தத்தளித்த கங்கப்பனின் பரிதாப நிலை முதல்வர் பன்னீர் செல்வத்தின்கவனத்திற்குச் சென்றது.
இதுகுறித்து பரிசீலித்த முதல்வர் பன்னீர் செல்வம், கக்கப்பனுக்கு அரசு சார்பில் ரூ.50,000 நிவாரண உதவி வழங்கஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications