For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோபால் என்னைத் தாக்கினார்: நாகப்பா பரபரப்பு பேட்டி

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

காட்டில் பணயக் கைதியாக இருந்தபோது சந்தனக் கடத்தல் வீரப்பனைக் கொல்ல முயற்சித்தேன். அப்போதுஅங்கிருந்த நக்கீரன் கோபால் என்னைத் தாக்கினார் என என்று வீரப்பனிடம் இருந்து தப்பிய ராஜ்குமாரின்உதவியாளர் நாகப்பா கூறினார்.

கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட நான்கு பேரை வீரப்பன் கடந்த ஆண்டு கடத்திச் சென்றான். கடத்தப்பட்ட நான்குபேரில் நாகப்பாவும் ஒருவர்.

கடத்தப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு முன்பே நாகப்பா வீரப்பன் கும்பலிடமிருந்து தப்பி ஓடி வந்துவிட்டார். சமீபத்தில் அதிரடிப் படையிடம் வாக்குமூலம் அளித்த அவர் அவர் நேற்று (திங்கள்கிழமை) பெங்களூரில்நிருபர்களிடம் கூறியதாவது:

வீரப்பனுக்கு கோடிக்கணக்கில் பணம் தேவைப்படவில்லை. ஆனால் ராஜ்குமாரை விடுவிக்க ரூ.50 கோடி கேட்கச்சொல்லி வற்புறுத்தப்பட்டான்.

நான் பணயக் கைதியாக இருந்த போது, வீரப்பன் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்னைக் கொலை செய்யத்திட்டமிட்டனர். இதை அறிந்ததும், நான் என் வேட்டியில் ஒரு அரிவாளை மறைத்து வைத்துக் கொண்டேன்.

வீரப்பனின் கூட்டாளிகள் அரிசி, காய்கறிகள் வாங்குவதற்காக வெளியே சென்றபோது, நான் அரிவாளை எடுத்துவீரப்பனின் கையில் வெட்டினேன். நான் வெட்டியதால், இப்போதும் வீரப்பன் கையை இயக்க முடியாமல்தான்இருப்பான்.

கோபால் தாக்கினார்:

ஆனால் அதற்குள் "நக்கீரன்" கோபால் என்னைத் தடுத்து விட்டார். வீரப்பனை வெட்டியதற்காக என்னை கோபால்தாக்கினார். இதில் என் பல் உடைந்தது. மேலும் வீரப்பனைப் பார்த்து இவன் ராஜ்குமாரின் உறவினர் கிடையாது.இவனைக் கொன்று உடலை அனுப்பு. அப்போது தான் உன் கோரிக்கைகளை இரு மாநில அரசுகளும்நிறைவேற்றுவார்கள் என்று கோபால் கூறினார்.

இதையடுத்து வீரப்பனும் கோபாலும் சேர்ந்தே என்னைத் தாக்கிக் கொல்லவும் முயன்றனர். ஆனால் அதற்குள் நான்தப்பி வந்து விட்டேன். முதலில் கோபாலைக் கைது செய்ய வேண்டும் என்றார் நாகப்பா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X