டிசம்பருக்குள் தமிழகத்தில் மேலும் 50 பெண் போலீஸ் நிலையங்கள்
சென்னை:
வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் கூடுதலாக 50 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களைத் திறக்க தமிழக அரசுமுடிவுசெய்துள்ளது.
பெண்களுக்கு ஏற்படும் சமூக பிரச்சனைகள், வரதட்சணைக் கொடுமைகள், பெண்கள் சம்பந்தமான ஊர்வலங்கள்,பெண்கள் கைது சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்து பெண்கள் சம்பந்தமான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கஜெயலலிதா ஆட்சியில் கடந்த 1991ம் ஆண்டு முதன்முதலாக மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டன.
இதன்படி ஒவ்வொரு மகளிர் போலீஸ் ஷ்டேஷனிலும், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 4 முதல் 10வரையிலான காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
இதற்காக சிறப்புக் காவல் படையில் பணியாற்றி வந்த பென் போலீசார் விடுவிக்கப்பட்டு, மகளிர்கால்நிலையத்துக்கு மாற்றப்பட்டார்கள்.
இதுபோன்ற மகளிர் காவல் நிலையங்களுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், தற்போது மீண்டும்அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் காவல் நிலையங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் கூடுதலாக 50 மகளிர் காவல் நிலையங்களை அமைக்கப்படும் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான நிதியும் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 11 ஸ்பெஷல் பட்டாலியன் பிரிவில், மொத்தம் 3,500 பெண் போலீசார் பணியாற்றிவருகிறார்கள். இவர்களில் சீனியாரிட்டி அடிப்படையில் மகளிர் கால்நிலையத்திற்கு நியமிக்கப்பட உள்ளனர்.