For Daily Alerts
Just In
காஷ்மீரில் முதன் முதலாக பாய்ந்த "பொடோ" சட்டம்
ஸ்ரீநகர்:
பொடோ சட்டத்தின் முதல் நடவடிக்கையாக, காஷ்மீரில் தீவிரவாதிகள் தங்கியிருந்த ஒரு வீட்டுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் முதல் முறையாக நேற்று (திங்கள்கிழமை) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில்தீவிரவாதிகள் தங்கியிருந்த ஒரு வீடு பொடோ சட்டத்தின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குலாம் முகமது என்பவருக்குச் சொந்தமான இந்த வீட்டில் ரகசிய அறை ஒன்றில் தீவிரவாதிகள் தங்கியிருந்தனர்.
போலீசார் இதைக் கண்டுபிடித்து, தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளும் பதில் தாக்குதல்நடத்தினர். இதில் ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
வீட்டு உரிமையாளரான முகமது மீதும் பொடோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, November 27, 2001, 5:30 [IST]