சென்னை, பெங்களூரில் இன்று நிருபர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தை உடனடியாக விடுதலை செய்யக் கோரி பல்வேறு பத்திரிக்கையாளர்கள்சங்கங்கள் சார்பில் சென்னையிலும் பெங்களூரிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

கர்நாடக அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிருபர் சிவசுப்ரமணியன் மீது பதிவு செய்யப்பட்டவழக்குகளை திரும்பப் பெற வேண்டும், பொடோ சட்டத்தில் செய்தியாளர்களுக்கு எதிராக உள்ள ஷரத்துக்களைநீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

இதேபோல கர்நாடக மாநிலத்திலும் அரசு தலைமைச் செயலகம் முன்பு நக்கீரன் ஆசிரியர் கோபால் தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) இச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டிருப்பதாவது,

கர்நாடக அதிரடிப்படை போலீசாரால் நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் அத்துமீறி கைது செய்யப்பட்டிருக்கிறார்.கர்நாடக அதிரடிப்படையின் இந்த அராஜகச் செயலைக் கண்டிப்பதுடன், 48 மணி நேரத்துக்குள் நக்கீரன் நிருபர்சிவசுப்பிரமணியனை விடுவிக்க வேண்டும்.

மேலும் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறவேண்டுமாறு முதல்வர் கிருஷ்ணாவைக்கேட்டுக்கொள்கிறோம்.

இல்லையேல் தமிழக பத்திரிக்கையாளர்களையும், பத்திரிக்கை அமைப்புகளையும் ஒன்றிணைத்து பெங்களூரில்உள்ள அரசு தலைமைச் செயலகமான விதான் சவுதா முன்பு, நக்கீரன் கோபால் தலைமையில் அறப்போராட்டம்நடக்கும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+