நக்கீரன் நிருபரை விடுவிக்கக் கோரி சென்னையில் நிருபர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை:
கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை உடனடியாக விடுதலைசெய்யக் கோரி சென்னையில் நிருபர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், நக்கீரன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்ய திட்டமிட்டிருப்பதைக் கண்டித்தும், குமுதம் நிருபர் கதிரவன்மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும், சமீப காலங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரானநடவடிக்கைகளைக் கண்டித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விருந்தில்லம் முன்பாக நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தின்போது,பொடோ சட்டத்திற்கு எதிராகவும் நிருபர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் டிசம்பர் 3ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்நடத்தப் போவதாகவும் பத்திரிக்கை நிருபர்கள் கூறினர்.
சென்னையில் உள்ள கர்நாடக சுற்றுலாத் துறை அலுவலகத்திற்கு முன்புதான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications