தமாகா-காங்கிரஸ் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை: ஜி.கே. வாசன்
டெல்லி:
தமாகாவை காங்கிரசுடன் இணையும் வாய்ப்புக்கே இடமில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன்தெரிவித்தார்.
ஜி.கே. வாசன் தமாகா தலைவரான பிறகு நேற்று (திங்கள்கிழமை) முதல் முறையாக டெல்லி சென்று, காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தமாகாவை காங்கிரசுடன் இணைக்குமாறு வாசனை சோனியா காந்தி வலியுறுத்தியதாகத் தெரிகிறது.ஆனால் இதற்கு மறுத்த வாசன் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மட்டும் ஆதரவளிப்பதாக மட்டும்கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது என்றுதீர்மானித்திருப்பதாகவும் வாசன் கூறினார்.
முதலில் 20 நிமிடங்கள் சோனியா காந்தியைத் தனியாகச் சந்தித்து பேசிய வாசன், பிறகு தமாகாவின் முக்கியத்தலைவர்களான ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ஞானதேசிகன் ஆகியோருடன் சேர்ந்தும்பேச்சுவார்த்தை நடத்தினார்.