வாணியம்பாடியிலும் பிப்ரவரியில் இடைத் தேர்தல்?
சென்னை:
வாணியம்பாடி எம்.எல்.ஏவாக இருந்த அப்துல் லத்தீப் நேற்று (திங்கள்கிழமை) இறந்துவிட்டதால்,அத்தொகுதிக்கும் வரும் பிப்ரவரி மாதம் இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த தங்கத் தமிழ்செல்வன் ஓரிரு மாதங்களுக்கு முன் தன்பதவியை ராஜினாமா செய்து விட்டார். டான்சி வழக்கில் விடுதலையானதைத் தொடர்ந்து, இத்தொகுதியில்தான்ஜெயலலிதா போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏவான வை. பெருமாள் கடந்த ஆகஸ்டு மாதம்மரணமடைந்ததால் அத்தொகுதியும் காலியானது.
இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் எம்.எல்.ஏவான அப்துல் லத்தீப் நேற்று சென்னையில்மரணமடைந்ததையடுத்து வாணியம்பாடி தொகுதியும் காலியாகியுள்ளது.
ஆண்டிப்பட்டி மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகளில் வரும் பிப்ரவரி மாத இறுதியில் இடைத் தேர்தல்நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
வாணியம்பாடி தொகுதிக்கும் அப்போதே தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிகிறது.