காஞ்சி அருகே பழங்கால சுவாமி சிலை புதையல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் பகுதியில் மண்ணைத் தோண்டியபோது 21 பழங்கால சுவாமி சிலைகள்கிடைத்தன.
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகேயுள்ள தையூர் பகுதியில் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் இந்தசிலைகள் கிடைத்தன.
பஞ்சாயத்து அலுவலக சுற்றுச் சுவரைச் சரிசெய்வதற்காக அங்கு பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தசிலைகள் கிடைத்தன.
ஆஞ்சநேயர், பெருமாள், முருகன் ஆகிய கடவுள்களின் சிலைகளும் இவற்றில் அடக்கம்.
21 சிலைகள் கிடைத்துள்ளது குறித்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும்வந்து சிலையை பார்ததவண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications