For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு ஆபத்தில்லை"

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொடர்ந்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அதற்கு ஆபத்து எதுவும்இல்லை என்று அணு சக்தி கமிஷன் தலைவர் டாக்டர் அனில் ககோட்கர் கூறினார்.

"கல்பாக்கத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் அப்போதைக்குஅப்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் முழு அளவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அங்கு அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நேர்ந்துவிட முடியாது" என்றும் ககோட்கர் கூறினார்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு மேலே சமீபத்தில் பாதுகாப்பையும் மீறி அமெரிக்க ஹெலிகாப்டர் பறந்ததுபற்றி நிருபர்கள் கேட்டபோது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று ஏற்கனவே அதிகாரிகள் உறுதிசெய்துவிட்டதாகக் கூறினார் ககோட்கர்.

முன்னதாக, சென்னையில் இன்று (புதன்கிழமை) "இண்டியன் கெமிக்கல் எஞ்சினியரிங் காங்கிரஸ் 2001" என்றமாநாட்டைத் துவக்கி வைத்து அவர் பேசியதாவது:

டிராம்பேயிலும் ராஜஸ்தானிலும் 680 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் உலைகள் விரைவில் அமைக்கப்படஉள்ளன.

நம் நாட்டில் தற்போது 2,000 மெகாவாட் என்ற அளவில் உள்ள அணுமின் உற்பத்தியின் அளவு அடுத்த பத்துஆண்டுகளில் 10,000 மெகாவாட்டாகவும், 2020ம் ஆண்டில் 20,000 மெகாவாட்டாகவும் அதிகரிக்கப்படும்.

கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் அடுத்த ஆண்டு மார்ச்சிலிருந்து மேமாதத்துக்குள் உற்பத்தியைத் தொடங்கும் என்றார் ககோட்கர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X