ராஜ்யசபாவுக்கு அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அம்மாவை நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு நானே சாட்சி என ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு அதிமுக சார்பில்போட்டியிடும் டாக்டர் மைத்ரேயன் கூறினார்.
மூப்பனார் மறைவால் காலியாகவுள்ள ராஜ்யசபா எம்.பி. பதவியை த.மா.கவுக்குத் விட்டுத் தர அதிமுகமறுத்துவிட்டது. இந்தப் பதவிக்கு அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயனை நிறுத்தியுள்ளது.
அவர் நேற்று இதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் பன்னீர்செல்வமும்உடனிருந்தார்.
வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய மைத்ரேயன்,
நம்பினார் கெடுவதில்லை என்பது பழமொழி. அம்மாவை நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு நானே சாட்சியாகநிற்கிறேன். அவர் வழிகாட்டுதலின்பேரில் செயல்பட்டு தமிழகத்துக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கபாடுபடுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications