For Daily Alerts
Just In
நெல்லையில் கண்ணகி கோவில் கட்ட அடிக்கல் நாட்டியவர்கள் கைது
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் கண்ணகி கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை அகற்றியதைக் கண்டித்த தமிழ் சான்றோர் பேரவைஎன்ற அமைப்பின் சார்பில் வியனரசு என்பவரது தலைமையில் திருநெல்வேலியில் ஒரு பிரிவினர் கூடினர்.
கொக்கிரக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட அறிவியல் மைய வளாகத்திற்கு எதிரே அவர்கள் கண்ணகிகோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப் போவதாக தெரிவித்தனர்.
பின்னர் கற்களை வைத்துப் பூஜை செய்தனர். மாநிலம் முழுவதிலும் 100 கண்ணகி கோவில்கள் கட்டப்படும்என்றும் தெரிவித்தனர்.
இந்த செய்தி அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், வியனரசு உள்ளிட்டவர்களைக் கைது செய்தனர்.
அடிக்கல் நாட்டப்பட்ட கற்களையும் அங்கிருந்து எடுத்துச் சென்றனர். தற்போது அந்த இடத்தில் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, January 2, 2002, 5:30 [IST]