தூதரக அதிகாரி கைது: இந்தியா மீது பாக். கோபம்
காத்மாண்டு:
சார்க் மாநாட்டின்போது தங்கள் தூதரக அதிகாரியைக் கைது செய்ய வைப்பதற்காக இந்தியா சதி செய்துள்ளதுஎன்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
தங்கள் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டதை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டித்துள்ளது.
சார்க் மாநாடு நடக்கும் நேரத்தில் வேண்டுமென்றே இந்தியாதான் சதி செய்து இந்தக் கைது நாடகத்தைநடத்துவதற்குத் திட்டமிட்டது என்று இந்தியாவையும் குற்றம் சாட்டியுள்ளது பாகிஸ்தான்.
சிராஜைக் கைது செய்ய வந்த போலீசாருடன் 4 இந்திய ஏஜென்டுகளும் வந்ததாகவும் அவர்கள்தான் சதி செய்துஅவரைக் கைது செய்யத் தூண்டியதாகவும் மற்றொரு பாகிஸ்தான் தூதரக அதிகாரி தெரிவித்தார்.
சார்க் மாநாட்டில் பாகிஸ்தானைக் கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்தியா இத்தகைய சதியில்ஈடுபட்டது என்றும் அந்த அதிகாரி கோபத்துடன் கூறினார்.
இச்சம்பவத்தைக் கண்டித்து நேபாள அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அந்த தூதரக அதிகாரிதெரிவித்தார்.
ஆனால் இச்சம்பவம் தவறுதலாக நடந்துவிட்டது என்று நேபாள அரசே மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகக் கூறியஅந்நாட்டுக்கான பாகிஸ்தான் தூதர் பாசியா நஸ்ரீன், இதனால் சார்க் மாநாடு பாதிக்கப்படாது என்றார்.












Click it and Unblock the Notifications