தமிழை வளர்க்க திமுக எதுவும் செய்யவில்லை: தம்பிதுரை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுகவினர் தமிழை வளர்க்கவில்லை, அவர்கள் அரசியல் தான் நடத்தினார்கள் என்று குற்றம் சாட்டினார் கல்வித்துறை அமைச்சர் தம்பிதுரை.
சென்னையில் நேற்று (சனிக்கிழமை) அறிவியல் தமிழ்-தமிழ் பண்பாட்டு கருத்தரங்கு தமிழக அரசு சார்பில்நடத்தப்பட்டது. கருத்தரங்கின் துவக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:
அறிவியல் தமிழ் வளர்க்கவே இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தமிழுக்கு வேண்டிய புத்தகங்கள் பெருக இந்தகருத்தரங்கம் உதவும்.
திமுக தான் தமிழை வளர்த்தது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு உலகத் தமிழ் மாநாட்டையாவதுநடத்தியுள்ளார்களா?
அவர்கள் அரசியல் தான் நடத்தினார்கள். தமிழை வளர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications