காஸ் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்
சென்னை:
எல்.பி.ஜி. காஸ் டாங்கர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற ஸ்டிரைக் இன்று (திங்கள்கிழமை) காலைதுவங்கியது.
கடந்த 1999ம் ஆண்டு நவம்பர் 1 முதல் 2000ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை தங்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய நிலுவை வாடகைப் பணத்தை ஆயில் கம்பெனிகள் கொடுக்கும் வரை ஸ்டிரைக் தொடரும் என்றுதென்மண்டல எல்.பி.ஜி. டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காஸ் டாங்கர் லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பல இடங்களில் சாலையோரங்களில் காஸ் டாங்கர் லாரிகள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திலிருந்து காஸ்சிலிண்டர்களை ஏற்றிச் செல்ல எந்த டாங்கர் லாரியும் வரவில்லை.
இதனால் இப்போதைக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. ஸ்டிரைக் மேலும் பல நாட்களுக்குத் தொடர்ந்தால்தான்பிரச்சனையே என்று இந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இந்த நிறுவனமும் அரசும் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.