For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போனஸ் கேட்டு பஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போனஸ் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று கோரி சென்னையில் அரசு போக்குவரத்துக் கழகஊழியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் போனஸ் கேட்டு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டம் நடத்தியது தமிழகத்தையே உலுக்கி எடுத்தது.

ஆனால் அவர்கள் கேட்ட 20 சதவீத போனசைத் தரமுடியாது என்று கூறிய தமிழக அரசு 8.3 சதவீத போனசைமட்டுமே தந்தது.

இந்நிலையில் மீத போனஸ் தொகையையும் தமிழக அரசு உடனடியாகத் தரவேண்டும் என்று கோரிபோக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று சென்னை பல்லவன் இல்லத்தின் முன் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர்.

போனஸ் பிரச்சனை மட்டுமின்றி வேறு 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவர்கள் இன்றுஉண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X