காஸ் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்
சேலம்:
எல்.பி.ஜி. காஸ் டாங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்த ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் தங்களுக்குத் தர வேண்டிய வாடகை நிலுவைத் தொகையைத் தரும் வரை ஸ்டிரைக்நடத்தப்படும் என்று எல்.பி.ஜி. காஸ் டாங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி கடந்த திங்கள்கிழமை முதல் காஸ் டாங்கர் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. இதையடுத்து மாநிலம்முழுவதும் காஸ் சிலிண்டர் விநியோகம் தடைபட்டது.
இந்தியன் ஆயில் நிறுவனங்களில் தேங்கியுள்ள காஸ் சிலிண்டர்களை எடுத்துச் செல்லவும் எந்த லாரியும்வரவில்லை.
இதையடுத்து பொங்கல் பண்டிகை வரும் நிலையில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் இன்று டாங்கர் லாரி உரிமையாளர்களும் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளும் சந்தித்துப்பேசியதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 12ம் தேதி நடக்கும் என்று காஸ் டாங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் கே. சுந்தரராஜ் தெரிவித்தார்.
அதுவரை தற்காலிகமாக இந்த ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.