எல்லாம் பாகிஸ்தான் கையில்தான் உள்ளது: பெர்னாண்டஸ்
டெல்லி:
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம்தான் எல்லைப் பதற்றத்தைக்குறைக்க முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்து வரும் நெருக்கடி போதாது என்றும் பெர்னாண்டஸ்கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் இந்தச் சிற்சில நடவடிக்கைகளால் நாம் மகிழ்ந்து போய்விடமாட்டோம் என்று கூறியுள்ள பெர்னாண்டஸ், அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள இன்னும் ஒரு வாரமேஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் வருமா?" என்று நிருபர்கள் கேட்டதற்கு, "பாகிஸ்தான்எல்லையில் சராமாரியாகப் பாகிஸ்தான் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதால் முதலில் இந்தியா-பாகிஸ்தான் 4வதுபோர் எப்போது வரும் என்பதைக் கூறுங்கள்" என்று பதிலளித்தார் பெர்னாண்டஸ்.