ஆண்டிப்பட்டியில் ஜெ.வை ஆதரிக்க எஸ்.டி.எஸ். கட்சி முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி சட்டசபை இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அதிமுக அறிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் துவக்கிய கட்சி இது.
தனது மறைவுக்குப் பின் அதிமுகவுடன் தனது கட்சி இணைய வேண்டும் என்று எஸ்.டி.எஸ். விரும்பினார். ஆனால்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து தனித்தே இயங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற சட்டசபை இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால்அவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications