For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனது பெயரை பயன்படுத்தி மோசடியா? - சோனியா எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா பெயரில் பணம் மோசடி நடப்பதால், இதில் யாரும் ஏமாந்து விட வேண்டாம்என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி அரசியலில் ஈடுபடுவார் என்று காங்கிரஸில்அனைவரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவின் பெயரைச் சொல்லி அவரது தந்தை ரஜீந்தர் வதேராவும்,அண்ணன் ரிச்சர்டு வதேராவும் பணம் வசூல் செய்து மோசடிகள் செய்வதாக சோனியாவுக்கு புகார்கள் வந்துள்ளன.

இவர்களுக்கும், தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இவர்கள் யாருக்காவது வேலை வாய்ப்பு மற்றும்சலுகைகள் பெற்றுத் தருவார்கள் என்று எண்ணி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று ராபர்ட் வதேராதனது வக்கீல் மூலம் பத்திரிக்கையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவிசோனியா காந்தி அனைத்து காங்கிரஸ் முதலமைச்சர்களுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.

யாரும் தனது பெயரையோ, தனது குடும்பத்தின் பெயரையோ பயன்படுத்தி சலுகைகள் பெற அனுமதிக்கக் கூடாதுஎன்ற நோக்கத்தில் இந்த கடிதம் எழுதப்பட இருக்கிறது. இந்த கடிதத்துடன் ராபர்ட்வதேரா பத்திரிக்கையில்பிரசுரித்துள்ள வக்கீல் அறிவிப்பையும் இணைத்து அனுப்ப உள்ளார்.

தனது குடும்பத்தின் பெயர் இழுக்கப்படுவதை பிரியங்காவும் விரும்பவில்லை என்று அந்த கடிதத்தில் சோனியாகுறிப்பிட உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X