பொது வேட்பாளர்: கருணாநிதி மீது சுவாமி குற்றச்சாட்டு
சென்னை:
ஜெயலலிதாவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்ததற்கு திமுக தலைவர்கருணாதிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
வரும் பிப்ரவரி 21ம் தேதி ஆண்டிப்பட்டி உட்பட மூன்று தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன்முடிவு செய்துள்ளது. இதனால் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டால் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
ஆனால் சில கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் அதனை ஆதரிக்க வில்லை. இந்நிலையில் திமுக 3 தொகுதிகளிலும்வேட்பாளரை நிறுத்தும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சுப்ரமணியசாமி சென்னையில் நிருபர்களிடம்கூறியதாவது:
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவதில் எதிர்க்கட்சிகள்தோல்வி அடைந்து விட்டன.
இதற்கு முழு பொறுப்பும் கருணாநிதியையே சேரும். அவருக்கு அந்த கடமை இருக்கிறது.
உத்தரபிரதேச இடைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக அணிகள் தோல்வியடையும். 3வது அணி தான்ஆட்சியமைக்கும்.
இந்த வலுவான புதிய அணியை அமைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஈடுபட்டுள்ளார் என்றுகூறினார் சுவாமி.
புலிகளை அனுமதிக்க சுவாமி எதிர்ப்பு:
இதற்கிடையே சென்னையில் விடுதலைப் புலிகளைத் தங்க வைப்பதற்கு சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்பிரபாகரன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாலும் அவர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்கக் கூடாதுஎன்று சுவாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications