பாகிஸ்தானின் துரோகத்தைப் பொறுக்க மாட்டோம்: அத்வானி
வாஷிங்டன்:
மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் செய்து வரும் துரோகத்தைக் கண்டு பொறுத்திருக்க மாட்டோம் என்றுஉள்துறை அமைச்சர் அத்வானி ஆவேசத்துடன் கூறினார்.
அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜான் அஷ்ராப்ட்டைச் சந்தித்துப் பேசிய பின்னர், வாஷிங்டனில் உள்ள இந்தியத்தூதரகத்தில் அவர் நிருபர்களிடம் பேசினார்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் அமைதியாகவே இருந்து வந்துள்ளோம். ஆனால் எங்களைப் பாகிஸ்தான்தொடர்ந்து சீண்டி விட்டுக் கொண்டே இருக்கிறது. இனியும் நாங்கள் பொறுத்திருக்க மாட்டோம் என்று அத்வானிகூறினார்.
அதே நேரத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் பாகிஸ்தானுக்கு காஷ்மீரை விட்டுக் கொடுக்கவும் மாட்டோம்என்றும் அத்வானி கூறினார்.
சர்வதேசத் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இந்தியாவில் திணிக்கப்பட்டதீவிரவாதத்தையும் எதிர்க்கிறது என்று குறிப்பிட்டார் அத்வானி.
பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளால் அந்நாடு விரைவில் எல்லை தாண்டியபயங்கரவாதத்தை முடிவுக் கொண்டு வரும் என்று நம்புவதாகவும் அத்வானி கூறினார்.
அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏயின் டைரக்டர் ஜார்ஜ் டெனட்டையும் அத்வானி சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications