தீவிரவாதத்தை ஒழிப்பதில் பாக். நடவடிக்கை போதாது: அத்வானி
வாஷிங்டன்:
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளைஅந்நாடு சந்திக்க நேரிடும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் விரைந்து, உறுதியாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில்உள்ளது. செயல்பட்டுத்தான் ஆக வேண்டும்.
மேலும் இந்தியா கேட்டுக்கொண்ட 20 தீவிரவாதிகளையும் உடனே ஒப்படைக்க வேண்டும்.
இந்தியாவிலிருந்த செயல்படும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களையும் உடனடியாக பாகிஸ்தான் திரும்பஅழைத்துக் கொள்ள வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் பாகிஸ்தான் உளவுத் துறை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவதையும் அந்நாடுதடுத்து நிறுத்த வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் அத்வானி.












Click it and Unblock the Notifications