லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
சிவகங்கை:
லஞ்சம் வாங்கியதற்காக சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோருக்கு 2 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் தவசியேந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காந்திராஜன். இவர் அப்பகுதியைச் சேர்ந்தசின்னையா என்பவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அந்த புகாரை ஏற்ற இன்ஸ்பெக்டர் மாயாண்டி பாரதி, இந்த புகாரின் பெயரில் நடவடிக்கைஎடுக்காமலிருக்க வேண்டும் என்றால் சின்னையாவிடம் லஞ்சம் கேட்டார். சின்னையாவும் லஞ்சமாக 4,000ரூபாயை தலைமைக் காவலர் ராமகிருஷ்ணனிடம் கொடுத்தார்.
இந்த விஷயத்தை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாண்டி பாரதியையும், தலைமைக் காவலர்ராமகிருஷ்ணன் ஆகியோரையும் கைது செய்து மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications