திருமலையிலிருந்து திருப்பதிக்கு கேபிள் ரோப் கார்
திருப்பதி:
திருமலையிலிருந்து திருப்பதிக்கு ரூ.91 கோடி செலவில் கேபிள் கார் மூலம் பக்தர்களை ஏற்றிச் செல்ல ஆந்திராசுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.
திருப்பதி-திருமலை ஏழுமலைகளுக்கு இடையே இரும்புக் கம்பிகள் மூலமாக அந்தரத்தில் இயங்கும் ரோப் கார்திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதற்காக 91 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி-திருமலை இடையே 6 கிமீ தூரம் இந்த ரோப் கார் இயங்கும். ஆயிரம் பக்தர்களை ஏற்றிச் செல்லும் வசதிஇதில் உள்ளது. நாளடைவில் இது 2,000 பக்தர்களை ஏற்றிச் செல்லும் வகையில் விரிவு படுத்தப்படும்.
மேலும் பக்தர்கள் வசதிக்காக மூன்று திரையரங்குகளுடன் கூடிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றும் ரூ.6 கோடிசெலவில் கட்டப்படும். ரூ.20 கோடி செலவில் ஆன்மீக பூங்காவும் அமைக்கப்பட உள்ளது.
சுற்றுலாத்துறையில் தனியார் முதலீட்டையும் நாங்கள் விரிவு படுத்த உள்ளோம். ஏற்கனவே ரூ.250 கோடி தனியார்முதலீடு சுற்றுலாத்துறையில் இருக்கிறது. 50 புதிய திட்டங்களின் மூலம் மேலும் 800 கோடி ரூபாய் நிதி திரட்டதிட்டமிட்டுள்ளோம்.
ஆந்திராமாநிலத்தை 2020ம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே மிகச் சிறந்த சுற்றுலா மையமாக மாற்றதிட்டமிட்டுள்ளோம்.