எல்லைப் பிரச்சனை: பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா.
ஐக்கிய நாடுகள்:
இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க உதவ வேண்டும் என்றபாகிஸ்தானின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் பாதுகாப்புக் குழு நிராகரித்து விட்டது.
இந்திய-பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்கும் விஷயத்தில் ஐ.நா. பாதுகாப்புக் குழு தலையிட வேண்டும் என்றுஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாம்ஷத் அகமது கான் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள 15 நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கமறுத்துவிட்டன.
காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சனை. இதில் நாங்கள்தலையிட முடியாது என்று அந்த 15 நாடுகளும் கூறிவிட்டன.
மேலும் இதைப் பற்றிப் பேசுவதற்கு அந்த உறுப்பு நாடுகள் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. இந்தப்பிரச்சனை குறித்து ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தலைவர் கருத்துக் கேட்டபோது, அனைவரும் பேசாமல்அமைதியாகவே இருந்துவிட்டனர்.
இதையடுத்து பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா. பாதுகாப்புக் குழு நிராகரித்து விட்டது. தீவிரவாதத்தைஎதிர்ப்பதுதான் எங்களுடைய முக்கியப் பணி என்றும அது கூறிவிட்டது.
காஷ்மீரில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வரும் தீவிரவாத அமைப்புகளை உடனடியாக முடக்கி வைக்கவேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு ஐ.நா. பாதுகாப்புக் குழு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications