செக்ஸ் டாக்டரின் ஆபாசப் படத்தில் நடித்த ஜோடிகள் ரகசிய வாக்குமூலம்
சென்னை:
டாக்டர் பிரகாஷின் ஆபாசப் படத்தில் நடித்த 2 பெண்களும், 2 ஆண்களும் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்அளித்தனர்.
ஆபாசப் படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் வெளியிட்ட டாக்டர் பிரகாஷை போலீசார் கைது செய்து சிறையில்அடைத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை இரண்டுஇளம்பெண்களை நீதிபதி முன்பு ரகசியமாக போலீசார் ஆஜர் படுத்தினர்.
அந்த பெண்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில் டாக்டர் தங்களுக்குமயக்க மருந்து கொடுத்து ஆபாசப் படங்கள் எடுத்ததை விளக்கினர்.
ஒரு பெண் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
எனக்கு 18 வயதாகிறது. வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தேன். வேலைக்கு பஸ்ஸில் சென்றபோது டாக்டரிடம் வேலை பார்த்த சரவணனுக்கும் எனக்கும் காதல்ஏற்பட்டது.
ஒரு நாள் சரவணன் என்னை டாக்டரின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர் எங்கள் இருவரையும்வளசரவாக்கம் பங்களாவுக்கு அழைத்துச் சென்று எனக்கு மட்டும் குளிர்பானம் கொடுத்தார்.
அதை குடித்ததும் நான் மயக்கமாகி விட்டேன். கண் விழித்து பார்த்தபோது என் உடலில் ஆடையின்றிபடுத்திருந்தேன். சரவணனிடம் கேட்டபோது, நாம் இருவரும் உல்லாசமாக இருந்தபோது, அதை டாக்டர் படம்எடுத்தார் என்று கூறினார்.
சரவணனிடம் நான் கடுமையாக சண்டை போட்டேன். என்னை சமாதானம் செய்த அவரும் டாக்டரும் எனக்குபணம் கொடுத்தனர். பின்னர் வேறு வழியின்றி அவர்கள் அழைத்த போதெல்லாம் சென்று ஆபாசப் படங்களில்நடித்தேன்.
என்னைப் போல் பல பெண்களும், ஆண்களும் டாக்டர் எடுத்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படங்களில் என்னைபார்த்த பிறகு விசாரித்த போலீசார், உங்கள் பெயரை வெளியில் சொல்ல மாட்டோம், நீதிபதியிடம் ரகசியவாக்குமூலம் மட்டும் அளித்தால் போதும் என்று கூறி அழைத்து வந்தனர் என்று அந்த பெண் கூறியுள்ளார்.
மற்றொரு பெண்ணும் இதே போல் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதே போல சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) 2 ஆண்களையும் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்களின் விவரங்களைபோலீசார் ரகசியமாக வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications