ஆண்டிப்பட்டியில் ஜெ. தோற்க வேண்டும்: இளங்கோவன் நப்பாசை
சென்னை:
ஆண்டிப்பட்டியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு தோற்க வேண்டும் என்பதேஎன்னுடைய எண்ணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து இளங்கோவன் கூறியதாவது:
மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருந்த அதிமுகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் இப்போது ஒன்றாகஇணைந்துள்ளோம்.
நாங்கள் இணைந்து செயல்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் எங்களுக்குஒத்த கருத்து உள்ளது.
தனி அணி அமைப்பது குறித்து 2 அல்லது 3 நாளில் தேவைப்பட்டால் தமாகா தலைவர் வாசனை சந்திப்பேன்.அப்போது கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும்.
இடைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் அல்லாத மதச்சார்பற்ற அணி உருவாவதற்கு இந்த இடைத்தேர்தல் காரணமாகஅமையும்.
ஆண்டிப்பட்டியில் தேர்தலுக்காக ஏராளாமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது ஒரு தவறான முன் உதாரணம்.
கடந்த 1996ம் ஆண்டு தேர்தலில் பர்கூரில் போட்டியிட்ட போது கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்தார்.ஆனால் தோல்வியடைந்தார். மக்கள் முடிவு எடுத்துவிட்டால் அவர்களை திசை திருப்ப முடியாது.
ஆண்டிப்பட்டியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு, தோல்வி அடைய வேண்டும்என்பதே எண்ணம் என்று இளங்கோவன் கூறினார்.