நெல்லையில் வயிற்றுப் போக்குக்கு 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் வயிற்றுப் போக்கு காரணமாக 6 பேர் பலியாகியுள்ளனர்.
முக்கூடல், பாப்பாக்குடி, சிங்கம்பாறை, மயிலப்பப்புரம் ஆகிய பகுதிகளில் இந்த சாவுகள் நடந்துள்ளன. இந்தக்கிராமங்களுக்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் இது பரவாமல் தடுக்கும் வகையில் தடுப்புநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை வயிற்றுப் போக்குக்கு மாரியம்மாள், லட்சுமி, மோட்சன், சுப்பம்மாள், அன்னம்மாள், குமார் ஆகியோர்பலியாகியுளளனர். இதில் குமாரைத் தவிர மற்றவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
குமாருக்கு வயது 26. அவர் ஏற்கனவே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.அவர் உண்மையிலேயே வயிற்றுப் போக்கு காரணமாகத்தான் இறந்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications