இனி எங்கும் தேசியக் கொடியைப் பறக்க விடலாம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தேசியக் கொடியை மக்கள் உபயோகப்படுத்த விதித்திருந்த விதிமுறைகளை ஜனவரி 26ம் தேதியிலிருந்து தளர்த்தகேபினட் கூட்டத்தில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டுவிட்டு வந்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன்கூறுகையில்:
தேசியக் கொடியின் கெளரவத்தையும், மரியாதையையும் காப்பாற்றவும் சில விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதற்கான வழிமுறைகள் பற்றி விவாதித்தோம்.
இன்னும் இரண்டு வாரங்களில் அந்த விதிமுறைகள் பற்றிய முறையான அறிவிப்பு வரும். பொது மக்கள்கொடியை பயன்படுத்த சில தடைகள் இருந்து வந்தன. இந்த தடைகளும் நீக்கப்படும் என்று பிரமோத் மகாஜன்கூறினார்.
இதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் நம் தேசியக் கொடியைப் பறக்க விடலாம்.












Click it and Unblock the Notifications