நண்பனை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற 2 பேர் கைது
சென்னை:
சென்னையில் நண்பர்கள் இருவர் சேர்ந்து மற்றொரு நண்பரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர்
சென்னை அருகே உள்ள நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (45). இவர் தமிழக குடிநீர் வாரியஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உளளனர்.
இவர் தனது நண்பர்கள் வேலு, சுறா ஆகியோருடன் திங்கட்கிழமை இரவு மது குடிக்கச் சென்றார். மது அருந்திக்கொண்டிருந்த போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
வீட்டுக்கு வரும் வழியிலும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டது. அப்போது தெருவின் ஓரத்தில் இருந்ததண்ணீர் தேங்கிய குட்டையில் துரைராஜை அவரது நண்பர்கள் தள்ளினர்.
போதையில் தண்ணீருக்குள் விழுந்ததால் அவரால் எழுந்திருக்க இயலவில்லை. அவரது நண்பர்கள் இருவரும்சேர்ந்து துரைராஜை தண்ணீரில் அமுக்கியதால், அவர் மூச்சுத்திணறி இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக துரைராஜ் நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிரவிசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications