கேஸ், கெரசின் விலை அதிகரிப்பு
டெல்லி:
அடுத்த மாதம் முதல் சமையல் கேஸ் ஒரு சிலிண்டருக்கு ரூ.90ம், கெரசின் விலை லிட்டருக்கு 75 காசுகளும்உயர்த்தப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ராம் நாயக் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் 28ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர்பட்ஜெட் தாக்கல் செய்வதை ஒட்டி நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க சமையல் கேஸ், கெரசின் ஆகியவற்றின்விலைகள் அடுத்த மாதம் உயர்த்தப்படலாம்.
ஆனால், தற்போது கெரசின், சமையல் கேஸ், ஆகியவற்றுக்கு அரசு அளித்து வரும் மானியத்தை தொடர்ந்துஅளிக்க கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த மானியம் வரும் ஏப்ரல் முதல் தேதிக்குப் பிறகும் தொடர்ந்து அளிக்கப்படும். அதன்படி கெரசினுக்கு 33சதவிகித மானியமும், சமையல் கேஸூக்கு 15 சதவிகித மானியமும் தொடரும்.
நிதி நெருக்கடியை பொறுத்து சமையல் கேஸ், கெரசின் ஆகியற்றுக்கான விலை உயர்த்தப்படலாம். இதன்படிகெரசின் விலை லிட்டருக்கு 75 காசுகளும், சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ.90ம் உயர்த்தப்படும் என்றுநாயக் கூறியுள்ளார்.
இதற்கிடையே சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்து விட்டதால், பெட்ரோல், டீசல்விலைகளை மத்திய அரசு குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications