இந்தியாவிலேயே பேச்சு நடத்த புலிகள் கோரிக்கை
மல்லவி (இலங்கை):
நார்வே குழுவினருடன் தாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையை தென்னிந்தியாவிலேயே நடத்துவதற்கு அனுமதிஅளிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் விடுதலைப் புலிகளிடமிருந்து எந்த ஒரு கடிதமும் தங்களுக்கு வந்து சேரவில்லை என்று இந்தியவெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி. தமிழ்செல்வன்நிருபர்களிடம் பேசுகையில், பேச்சுவார்த்தையை தென்னிந்தியாவில் நடத்துவதற்கு இந்தியா அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நார்வே குழுவினருடன் நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் இந்திய அரசின் பங்கு முக்கியமானது என்று நாங்கள்கருதுகிறோம் என்று கூறிய தமிழ்செல்வன், எதிர்காலத்திலும் இந்தியாவின் உதவி எங்களுக்கு அதிகம்தேவைப்படுகிறது என்றும் கூறினார்.
கடந்த 18 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வந்த நாங்களும் இலங்கை அரசுமே தற்போது பேச்சுவார்த்தைநடத்தலாம் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு, இந்தியா எங்களுக்கு உதவுவதில் தவறே இல்லை என்றும்தமிழ்செல்வன் கூறினார்.
சிறுநீரக நோயால் அவதிப்படும் பாலசிங்கம் சிகிச்சை மேற்கொள்வதற்கு தென்னிந்தியாதான் பொருத்தமான இடம்என்று நாங்கள் கருதுகிறோம். அதனாலேயே பேச்சுவார்த்தையை அங்கு நடத்துவதற்கு அனுமதி அளிக்கவேண்டுகிறோம் என்றும் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
போர்நிறுத்தத்தை நீட்டிக்க நார்வே கோரிக்கை:
இதற்கிடையே விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் தாங்கள் அறிவித்துள்ள ஒருமாத கால போர்நிறுத்தத்தைநீட்டிக்க வேண்டும் என்று நார்வே பேச்சுவார்த்தைக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை முழு வெற்றி அடைவதற்கு இந்த நிரந்தரப் போர்நிறுத்தம் உதவும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நார்வே தூதுக் குழுவில் உள்ள எரிக் சோல்ஹைம் மற்றும் ஜெர்ஸ்டி டிராம்ஸ்டால் ஆகியோர் நேற்றுபாலசிங்கத்துடன் இதுகுறித்து விவாதித்தனர்.












Click it and Unblock the Notifications