தலிபான் தீவிரவாதிகளுக்கு மொட்டை
வாஷிங்டன்:
அமெரிக்காவிடம் பிடிபட்ட தலிபான் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு மொட்டையடிக்கப்பட்டு,தாடிகளும் மழிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்தத் தீவிரத் தீவிரவாதிகளை அமெரிக்கா தனது முகாம்களுக்குக் கொண்டு செல்ல ஆரம்பித்துள்ளது.கியூபா அருகே உள்ள குவாண்டநெமோ பேவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமில் இவர்களுக்காக ஒரு பெரியசிறை அமைக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய ராணுவ சரக்கு விமானங்கள் மூலம் இந்தத் தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காஅள்ளிச் சென்று வருகிறது.
உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு இவர்களின் தாடிகளும், தலைகளும் மழிக்கப்படுவதாக பென்டகன் அதிகாரிலபேன் கூறினார். இதில் இஸ்லாமுக்கு எதிரான செயல் எதையும் அமெரிக்கா செய்யவில்லை என்று கூறிய அவர்,தாடி வைக்க வேண்டும் என்று இஸ்லாமிய மதத்தில் எங்குமே கூறப்படவில்லை என்றார்.
இவர்களின் முடிகளில் பொடுகுகளும், பேன்களும் நிறைந்துள்ளதால் உடல் நலனைக் கருத்தில் கொண்டு தான்மொட்டை போடப்பட்டது என்றார்.
மேலும் இவர்களுக்கு குரான், தொழுகைக்கு பயன்படுத்தப்படும் விரிப்பு, தொழுகைக்குத் தேவையான நேரம்எல்லாமே தரப்பட்டுள்ளது என்றார்.
பென்டகன் இத்தனை விளக்கம் தந்த பின்னரும் இவர்களுக்கு மொட்டைபோட்டு, தாடிகள் மழிக்கப்பட்டதைபிரச்சனையாக்கி வருகின்றன சில அமெரிக்க இஸ்லாமிய அமைப்புகள்.