For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்டிப்பட்டியிலும் தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் கமிஷனுக்கு வைகோ கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆண்டிப்பட்டி தேர்தலையும் மற்ற தொகுதிகளைப் போல் தள்ளி வைக்க வேண்டும் என்று மதிமுக தலைவர்வைகோ தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சாைதாப்பேட்டை, வாணியம்பாடித் தொகுதிகளில் வாக்காளர்கள் சேர்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதால்அத்தொகுதிகளில் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் நேற்று (செவ்வாய்க்கிழமை)அறிவித்தது.

ஆனால் ஆண்டிப்பட்டியில் மட்டும் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்குபல கட்சிகளும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் வைகோ தேர்தல் ஆணையத்துக்கு இது குறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர்கூறியிருப்பதாவது:

ஆண்டிப்பட்டி தொகுதியிலும் மற்ற தொகுதிகளைப் போல் அதிக அளவில் போலி வாக்காளர்கள்சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், அங்கு தேர்தல் விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. அரசு இயந்திரங்கள், அரசு அதிகாரிகள்அனைவரையும் அங்கு அதிமுக தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வருகிறது.

மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் என அனைவரும் அங்கு பணத்தை வாரி இறைக்கின்றனர். அதனால் இங்கும்மற்ற இரண்டு தொகுதிகளைப் போல் தேர்தல் ஆணையம், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.

மூன்று இடங்களிலும் நியாயமான முறையிலும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X