இன்று இந்தியா வருகிறார் பாவல்
டெல்லி:
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல் இன்று (வியாழக்கிழமை) மாலை இந்தியாவுக்குவருகிறார்.
நேற்று பாகிஸ்தானில் அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் உள்பட பல தலைவர்களையும் சந்தித்த பாவல்,பாகிஸ்தானின் தீவிரவாதத்தைக் கண்டித்து எதுவுமே பேசவில்லை.
கடந்த டிசம்பர் 12ம் தேதி தொலைக்காட்சியில் முஷாரப் பேசிய பிறகு, 1,900 மதவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதற்காக அவரைப் பாராட்டி பாவல் பேசினார். இதை இந்தியாவிடமும் பெருமையாகத்தெரிவிக்கப் போவதாகவும் பாவல் கூறியுள்ளார்.
ஆனால் பாவல்லின் இந்தப் பேச்சையெல்லாம் இந்தியா கேட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வராத வரையில் பாகிஸ்தானுடன்பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என்றும் இந்தியா ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளது.
மேலும் காஷ்மீர் பிரச்சனையில் 3வது நாட்டின் தலையீட்டையும் ஏற்கப் போவதில்லை என்றும் இந்தியா பலமுறைகூறி விட்டது.
இந்தியாவுக்கு 2வது முறையாக வரும் பாவல், பிரதமர் வாஜ்பாய், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்,உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோரைச்சந்திக்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே விமான, ரயில், பஸ் போக்குவரத்தை மீண்டும் துவக்க வேண்டும் என்றுஇந்தியாவிடம் பாவல் கோரிக்கை விடுக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications