போர் விமானம்: இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி
வாஷிங்டன்:
இந்தியா தயாரித்து வரும் நவீன போர் விமானமான எல்.சி.ஏவுக்குத் தேவையான என்ஜின்களைத் தர அமெரிக்காமுன் வந்துள்ளது.
இதையடுத்து இந்தியா தனது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை வைத்து இந்த சோதனை விமானத்தைத் தயாரித்தது.வேறு விமானத்தில் இருந்த அமெரிக்காவின் ஜி.ஈ. நிறுவன என்ஜினை எல்.சி.ஏவில் பொறுத்தி சோதனையும்செய்து பார்த்துவிட்டது. இந்தச் சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அமெரிக்கா என்ஜின் தராது என முடிவெடுத்த இந்தியா இதற்காக காவேரி எனப்படும் என்ஜின்களைத் தயாரிக்கஆரம்பித்துள்ளது. ஆனால், இந்த என்ஜின் தயாரிப்பு காலதாமதம் ஆகி வருகிறது. இதனால் எல்.சி.ஏ. தயாராவதும்காலதாமதமாகி வருகிறது.
இந் நிலையில் மீண்டும் இந்தியாவுக்கு என்ஜின்களைத் தர அமெரிக்கா முன்வந்துள்ளது. இதனால், எல்.சி.ஏ. மிகவிரைவிலயே தயாரிக்கப்பட்டு விமானப் படையில் சேர்க்கப்பட்டுவிடும்.
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசும் அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர்டொனால்ட் ரம்ஸ்பீல்டும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதே போல இரு நாட்டு ராணுவத்தினரும் ரகசிய தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவும்முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. இந்தியாவை எப்போதும்சந்தேகப் பார்வையோடு பார்த்து வரும் அமெரிக்கா ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளதுஇதுவே முதன்முறையாகும். பென்டகனில் இதற்கான ஒப்பந்தத்தில் பெர்னாண்டஸ் கையெழுத்திட்டார்.
அதே போல நீர்மூழ்கிகளில் பிரச்சனை ஏற்பட்டால் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளவும்,மலாக்கா பகுதியில் உள்ள அமெரிக்கக் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்புத் தருவது குறித்தும்விவாதிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பின்னர் பென்டகனில் நிருபர்களிடம் பேசிய பெர்னாண்டஸ்,
எல்லையில் இப்போது நிலவும் பதற்றத்துக்கு பாகிஸ்தன் தான் முழக்க முழக்க காரணம். பயிற்சிக்காக எல்லைக்குவந்த பாகிஸ்தான் ராணுவம் அங்கேயே முகாமிட்டது. இதனால் தான் எங்கள் படைகளைக் குவித்தோம்.இப்போதும் கூட பாகிஸ்தானின் செயலைப் பொறுத்துத் தான் எங்கள் நடவடிக்கைகள் அமையும் என்றார்.