பால் தாக்கரேயை ஒப்படைக்கத் தயாரா? - பாகிஸ்தான் கேள்வி
துபாய்:
திரும்பத் திரும்ப 20 தீவிரவாதிகளை ஒப்படைக்க இந்தியா கோரியதைக் கண்டித்த ஒரு பாகிஸ்தான் அமைச்சர்,சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை எங்களிடம் ஒப்படைக்க இந்தியா தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே மும்பை இனக் கலவரங்களுக்கு முக்கியக் காரணமான பால் தாக்கரேயை எங்களிடம் ஒப்படைக்கத் தயாரா,எங்களுடைய வேண்டுகோளுக்கு இந்தியா பணியத் தயாரா என்றும் அஷ்ரப் கேட்டுள்ளார்.
ஒரு ஆதாரத்தையும் கொடுக்காமல் தொடர்ந்து 20 தீவிரவாதிகளை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறதுஎன்றும் அவர் இந்தியாவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்கும் ஒரு ஆதாரத்தையும் தராமல் பாகிஸ்தான்தான் காரணம் என்றுதேவையில்லாமல் இந்தியா கூறி வருவதாகவும் அஷ்ரப் கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலைக் கருத்தில் கொண்டே பிரதமர் வாஜ்பாயுடைய பாரதிய ஜனதா கட்சிதான்போரைத் தூண்டிக் கொண்டிருக்கிறது என்றும் அஷ்ரப் தெரிவித்தார்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு சிறு பொறி தெறித்தால்கூடப்போதும் அது பெரும் போராக வெடிக்கும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications