Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புலிகளுக்கு இந்தியா அனுமதியா? கருணாநிதி-ஜெயுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை பிரச்சனை தொடர்பாக புலிகளுக்கும் நார்வே குழுவினரும் இந்தியாவில் தங்கி பேச்சு நடத்தஅனுமதிக்கலாமா என்பது குறித்து பல கட்சித் தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தஆரம்பித்துள்ளது. முதல்கட்டமாக தமிழக தலைவர்களுடன் இந்த ஆலோசனையைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை மத்தியவெளியுறவுத்துறை இணையமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா நேற்று சந்தித்துப் பேசினார்.

முதலில் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய வசுந்தரா பின்னர் மாலையில் திடீரெனகருணாநிதியையும் சந்தித்துப் பேசினார்.

ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசியதில் அரசியலும் பேசப்பட்டதாகத் தெரிகிறது. மத்திய அரசுக்குஜெயலலிதா தொடர்ந்து ஆதரவளித்து வருவதை பிரதமரும் மூத்த பா.ஜ.க. தலைவர் அத்வானியும் வரவேற்பதாகக்கூறிய வசுந்தரா தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பின்னர் தான் முக்கிய விவகாரமான புலிகள் விஷயம் பேசப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாதலையிட வேண்டும் என அந் நாட்டு அரசு சார்பிலும், புலிகள் சார்பிலும், நார்வே சார்பிலும் தொடர்ந்துவற்புறுத்தல் வந்து கொண்டிருப்பதால் இது குறித்துப் பரிசீலிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதை வசுந்தராவிளக்கினார்.

இதனால் தமிழகத்தில் ஏற்படும் அரசியல் பாதிப்புகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தவிவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வசுந்தரா கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் சென்று சந்தித்த வசுந்தரா, அவருடனும் இந்தவிவகாரம் குறித்துப் பேசினார்.

தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ இல்லை என்பதை விளக்கிய கருணாநிதி, இந்தவிஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து மத்திய அரசு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிற முக்கிய கட்சித் தலைவர்களுடன்ஆலோசனை நடத்திவிட்டு ஒரு முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக புலிகள் தமிழகத்தில் தங்கி பேச்சு நடத்த அதிமுக, காங்கிரஸ், த.மா.கா ஆகியவை எதிர்ப்புத்தெரிவித்திருந்தன. திமுக, மதிமுக ஆகியவை மத்திய அரசின் முடிவை ஏற்பதாதக் கூறியுள்ளன.

இந் நிலையில் வசுந்தராவின் ஆலோசனைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+