20 தீவிரவாதிகளை பாக். ஒப்படைக்கும் வரை படை வாபஸ் இல்லை: பெர்னாண்டஸ்
வாஷிங்டன்:
நாங்கள் கேட்டுக் கொண்ட 20 தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் ஒப்படைப்பது வரை எல்லையிலிருந்து இந்தியப்படைகளை வாபஸ் பெறமாட்டோம் என்று பாதூப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
இப்போதும் கூட தீவிரவாதிகளை இந்தியப் பகுதிக்குள் பாகிஸ்தான் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது என்றுஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது பெர்னாண்டஸ் கோபத்துடன் கூறினார்.
ஆனால் இந்தியாவின் கோரிக்கையை இதுவரை பாகிஸ்தான் காதில் போட்டுக் கொண்ட மாதிரியே தெரியவில்லைஎன்றும் பெர்னாண்டஸ் புகார் கூறினார்.
பாகிஸ்தானுடன் அமைதியாகப் போவதையே நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான் எல்லையில் அவ்வளவுபடைகளைக் குவித்தபோதிலும், இன்னும் அந்நாட்டைத் தாக்காமல் ராஜ தந்திர வழிகளையே கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
தீவிரவாதிகளை ஒடுக்குவோம் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் வெறும் வாய் வார்த்தைகளில்தான்கூறியுள்ளார். ஆனால் தினமும் ஏராளமான தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிக் கொண்டிருப்பதை நாங்கள்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர் சொல்லுக்கும் செயலுக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லைஎன்றார் பெர்னாண்டஸ்.












Click it and Unblock the Notifications