வீட்டுச் சாப்பாடு ஏக்கத்தில் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட கைதி
திருவள்ளூர்:
வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவைச் சாப்பிட போலீசார் அனுமதிக்காததால் கைதி ஒருவர் பிளேடால் கழுத்தைஅறுத்துக் கொண்டார்.
திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டியைச் சேரந்தவர் குணசீலன் (34). இவர் பல திருட்டு வழக்குகள் தொடர்பாககைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வழக்கு தொடர்பாக நேற்று (புதன்கிழமை) குணசீலனை போலீசார் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டுசிறைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது குணசீலனை பார்க்க வந்திருந்த அவரது உறவினர்கள் சாப்பாடு கொடுத்தனர். ஆனால் அதைகுணசீலனுக்கு கொடுக்க போலீசார் மறுத்து விட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த குணசீலன் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
இதனால் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பின்னர் போலீசார் குணசீலனை மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications