இந்தியா-பாக். படைகளை விலக்க அன்னான் கோரிக்கை
இஸ்லாமாபாத்:
இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து தங்கள் படைகளை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் கோபி அன்னான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் உள்பட பல தலைவர்களை அன்னான் சந்தித்துப் பேசினார்.
காஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா. தலையிடாது என்று ஏற்கனவே அன்னான் கூறியிருந்தார். இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால் மட்டுமே இப்பிரச்சனையில் தலையிடப் போவதாக நேற்றும் அன்னான் கூறினார்.
ஆனாலும் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அன்னான் கேட்டுக் கொண்டார்.
முதற்கட்டமாக இரு நாடுகளும் எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை உமனயைபக வாபஸ் பெற வேண்டும்என்றும் அன்னான் வலியுறுத்தினார்.
அணு ஆயுதம் வைத்துள்ள இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதற்றம், பிற நாடுகளின்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அன்னான் கூறினார்.












Click it and Unblock the Notifications